சனி, 28 ஜனவரி, 2012

2 வயதுமுதல்3 வயதுவரை

கவனிக்க வேண்டிய பதிவு : குழந்தை வளர்ப்பில் டிப்ஸ்

2  வயது முதல் 3  வயது வரை குழந்தைகளைப் பொறுத்த வரை நன்கு பேச ஆரம்பித்து இருப்பார்கள். இந்த வயதில் பெரும்பாலும் எல்லாப் பொருள்களையும் கண்டவுடன் அவை அவர்களுக்கு ஆச்சர்யத்தையும், சந்தோழத்தையும் கொடுப்பதுடன் புதிய புதிய பொருள்களையும், புதிய புதிய வார்தைகளையும் அவற்றுக்கான அர்த்தங்களையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் உடையவர்களாக இருப்பார்கள்.நாம் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டே நாம் பயன்படுத்தும், பொருள்கள், நாம் பார்க்கும் பொருள்கள் என்று அனைத்தின் பெயர்களையும் அவர்களுக்கு கூறிக்கொண்டே வர அவர்களின் அறிவு விருத்தியாகும்.

இந்த வயதில் அவர்களின் அறிவுக் கூர்மையை அதிகப்படுத்த, அவர்களின் கவனிக்கும் திறனை,  ஜாபகசக்தியை அதிகரிக்க நாம் பல்வேறு பயிற்சிகளை  அறிமுகபடுத்தலாம். அதில் கீழ் உள்ளவைகள் ஓர் எடுத்துக்காட்டு தான். இவற்றை குழந்தையை தாய் தன மடியில் அமர்த்தி ஒரு விளையாட்டு போல ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை திரும்பத் திரும்ப கூறி வந்தால் சில நாட்களுக்குப் பிறகு குழந்தையே படத்தைப் பார்த்தவுடன் பெயரை கூறும் இவ்வாறு குழந்தைக்கு மேலும் மேலும் நாம் பலவற்றை கூறி குழந்தையை அறிவாளிகளாக மாற்ற முடியும்.

மேலும் இந்த பயிற்சியில் படங்கள் உடனுக்குடன் காண்பிக்கப்படுவதால் குழந்தையின் ஆர்வம் அதிகமாவதுடன் குழந்தையின் கவனிக்கும் திறன், ஜாபகசக்தி இவையும் அதிகரித்து உங்கள் குழந்தையை ஓர் அருமையான மிகத் திறமையான குழந்தையாக உருவாக்கும்.

இதைப் போல விரிவான தகவல்கள் பெற அணுகவேண்டிய விலாசம்

natchatthirangal@gmail.com 

செல்பேசி எண் - 91769 67377


இந்த வீடியோக்களை  குழந்தைகளுக்கு காண்பிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:-


  • உங்கள் கம்ப்யூட்டர் டேபிள்-ஐ சுத்தமாக வைக்கவும். இது குழந்தையின் கவனம் வேறு எதிலும் திரும்பாமல்  பார்த்துக் கொள்ளும்.
  • அருகில் எந்த விளையாட்டு பொம்மையும் வேண்டாம். ஏனெனில் இவை குழந்தையின் கவனத்தை திசை திருப்பகூடியவை .
  • கீழே உள்ள சில வீடியோக்களில்  உள்ளது போல தங்கள் குழந்தையை தங்களின் மடி மீது அமர்த்திகொண்டு  குழந்தையிடம் கொஞ்சிப் பேசுங்கள்.
  • இந்த படங்களை காட்டும் போது குழந்தையின் கவனம் பிறரின் மேல் செல்லாமல் இருக்க தங்களையும், தங்களின் குழந்தையும் தவிர வேறு யாரும் அருகில் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • நாம் படம் பார்க்கலாமா என்று கூறியபடி கம்ப்யூட்டர்-ஐ on செய்யுங்கள். இவ்வாறு ஒவொரு தடவையும் செய்யும்போது குழந்தையீன் உற்ச்சாகம் பல மடங்கு அதிகரிக்கும்.
இந்த வீடியோக்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் முன் அவற்றைப் பற்றி குழந்தையோடு குழந்தையாக  அமர்ந்து சிரித்துப் பேசுங்கள். தாங்கள் என்ன குழந்தைக்கு சொல்லிகொடுக்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள். பின்னர் இவற்றை காண்பியுங்கள்.  பிறகென்ன உங்கள் குழந்தை பள்ளியில் முதலிடம் தானே.

சில எடுத்துக்காட்டுக்கள்:-

நாங்கள் இங்கு சில தலைப்புகளில் சிலவற்றை மட்டும் காண்பித்து உள்ளோம். இவற்றை இதே வரிசையில் காண்பிப்பதை விட ஒவ்வொரு தடவையும் கலைத்து மீண்டும் காண்பித்தால் இன்னும் வேகமான வளர்ச்சியை தங்களின் குழந்தையிடம் காணலாம். அவ்வாறு காண்பிப்பதன் மூலம் இந்த தடவை அம்மா என்ன காண்பிக்க போகிறார்கள் என்கிற ஆர்வத்தை வளர்ப்பதன் ,மூலம் குழந்தையின் ஆர்வத்தை தூண்டி அவர்களின் ஜாபக  சக்தியையும் வளர்க்க முடியும்.  இதன் படி முதல் நாள், இரண்டாவது நாள், மூன்றாவது நாள் என நாங்கள் கூறியுள்ளபடி மாற்றி மாற்றி காண்பிக்கவும். திரும்பவும் முதல் நாள், இரண்டாவது நாள் என மாற்றி மாற்றி காண்பிதத்துவர அவர்களின் உன்னித்து கவனிக்கும் திறன் வளர்ந்து   விரைவில் நீங்கள் படங்களை காண்பித்தவுடன், அது என்ன என்று கூறும் அறிவுத் திறனை குழந்தை பெறுவான். இதை அனுபவ பூர்வமாக உணர க்கண்டிப்பாக தினமும் குறைந்தது 3 முறையாவது காண்பிக்கவும்.வேலைக்கு செல்பவர்கள் மலையில் குழந்தையுடன் விளையாடும் போது குறைந்தது 30 நிமிடங்கள் இடைவெளியில்  3 முறையாவது காண்பிக்கவும். நிச்சயம் தங்களின் குழந்தை வருங்கால நட்சத்திரமாவான்.

இது போன்ற விரிவான பல தகவல்களுக்கு தாங்கள் அணுகவேண்டிய முகவரி

natchatthirangal@gmail.com  


செடிகளின் பகுதிகள்:-


முதல் நாள்:-
இரண்டாவது நாள்:-
மூன்றாவது நாள்:-

நிறங்கள்-Colours:-


முதல் நாள்:-
இரண்டாவது நாள்:-
மூன்றாவது நாள்:-

நாடுகளின் வரைபடங்கள் - Countries shapes -


முதல் நாள்:-

இரண்டாவது நாள்:-
மூன்றாவது நாள்:-


பறவைகள் - Birds:-


முதல் நாள்:
இரண்டாவது நாள்:-
மூன்றாவது நாள்:-


இதன் மூலம் குழந்தையின் அறிவுத்திறன் மட்டும் வளரவில்லை.  குழந்தையின் கவனிக்கும் திறன் வளர்கிறது. இதனால் சுற்றுச் சூழலில் நடப்பவற்றை உடனுக்குடன் கிரகிக்கும் திறன் அதிகரிக்கிறது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதனால் ஏற்படும் இன்னும் பல நன்மைகளை நான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதை விட இந்தப் பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்றுகொடுப்பதன் மூலம்  அதன் நன்மைகளை நேரில் உணர்வீர்களாக.

எங்கள் வலைதளத்தை பின்பற்றி உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.

வாழ்க வளமுடன்.

மேலும் இவை போல் விரிவான பயிற்சிகளை பற்றி அனைத்தையம் அறிந்து கொள்ள அணுகவும்  e -mail விலாசம்

natchatthiriangal@gmail.com

இவற்றை தாங்கள் அனுபவிப்பதோடு பிறருக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயன் பெற வேண்டுகிறோம். மேலும் தங்களின் மேலான கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன.

வாழ்க வளமுடன்

மேலும் தங்களின் பெயர் குழந்தை வளர்ப்பில் டிப்ஸ் பகுதியில் இடம் பெற தங்களுடையமேலான, அனுபவபூர்வமான, சிறந்த, உபயோகமுள்ள பல டிப்ஸ்-களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை மற்றவர்களுக்கும் பயன் அளிக்கும் அல்லவே? டிப்ஸ் தெரிவிக்க வேண்டிய முகவரி 

natchatthirangal@gmail.com

வாழ்க வளமுடன்